For Daily Alerts
Just In
பாஸ்வானை கழட்டி விடக் கூடாது: கருணாநிதி
சென்னை:
பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஸ்வானை கூட்டணியிலிருந்து நீக்கக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளக்கட்சிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக நாளிதழான முரசொலியில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கருணாநிதி அளித்துள்ள பதிலில், பீகார் சட்டசபைத்தேர்தலில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் (லாலு பிரசாத் கட்சி), லோக் ஜனசக்தி கட்சி (பாஸ்வான் கட்சி) ஆகியவை கூட்டணிஅமைத்துப் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தக் கூட்டணியிலிருந்து யார் பிரிந்தாலும் அது நஷ்டத்தையேதரும்.கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, அதை தேர்தலுக்குப் பிறகு பேசி சரி செய்து கொள்ளளாம். தேர்தலை இந்த மூன்றுகட்சிகளும் இணைந்து சந்தித்தால்தான் நல்லது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கருத்து வேறுபாடு உடைய பல கட்சிகளும் இணைந்து சந்தித்து பெரும் வெற்றியைஈட்டியதை நாம் மறந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பாஜக தலைவர்கள் வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்த மற்றொரு கேள்விக்கு,பாபர் மசூதியை இடிப்பிலிருந்தே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடங்கி விட்டது. இப்போது அது ஏற்படவில்லைஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.
Comments
Story first published: Monday, September 12, 2005, 5:30 [IST]