குண்டர் சட்டத்தை எதிர்த்து ஆதிகேசவன் மனைவி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மோசடி மன்னன் ஆதிகேசவனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து அவரது மனைவி சாந்தி, சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்துள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கோடிக்கணக்கில் கடன் பெற்றுத் தருவதாக கூறி நூற்றுக்கணக்கான பேரிடம் பல கோடி ரூபாய்பணத்தை சுருட்டியதாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேவசன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மகன் சாரதி,கூட்டாளிகள் சிலரும் கைதாகியுள்ளனர்.மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆதி கேசவனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் ஆதி கேசவனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து அவரது மனைவி சாந்தி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக சாந்தி தாக்கல் செய்துள்ள ஹேபியஸ் கார்பஸ் மனுவில், ஆதிகேசவனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications