கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதாமுன்னிலையில் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

சென்னை நகர குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.இத்திட்டத்திற்கு ரூ. 1000 கோடி தருவதாக மத்திய அரசும் அறிவித்தது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் இத்திட்டம்ஒப்பந்தமாவது தடைபட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை இத்திட்டம் தொடர்பான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தலைமைச் செயலகத்தில்கையெழுத்தானது. தமிழக அரசின் சார்பில் சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம், திட்டத்தை நிறைவேற்றப்போகும் ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்டமைப்பு மற்றும் திட்டம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இத்திட்டம் சென்னை அருகே உள்ள மீஞ்சூரில் நிறுவப்படும். தினசரி 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை ஹைதராபாத் நிறுவனம்சுத்திகரித்து குடிநீராக்கித் தரும். அதை சென்னை குடிநீர் வாரியம் பெற்றுக் கொள்ளும்.

மீஞ்சூரில் இதற்காக 60 ஏக்கர் நிலம் ஹைதராபாத் நிறுவனத்திற்குத் தரப்படும். இந்த நிறுவனம் திட்டத்தை செயல்படுத்துவதற்கானதொழில்நுட்ப உதவிகளையும், கருவிகளையும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெஃபீசா கட்டுமான நிறுவனத்திடமிருந்து பெறும்.கடல் நீரைக் குடிநீராக்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாக இது திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம் தொடங்கப்பட்ட 15 மாதங்களில் அது நிறைவு பெறும். அதன் பின்னர் சென்னைக் குடிநீர் வாரியத்திற்குசுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் வழங்கப்படும். 25 ஆண்டுகளுக்கு குடிநீராக்கப்பட்ட கடல் நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்குவழங்கப்படும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தேவைக்கேற்றபடி ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+