18 மாதக் குழந்தையை விற்க முயன்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
18 மாதக் கைக் குழந்தையை வெறும் 1000 ரூபாய்க்கு விற்க முயன்ற 55 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கெங்குசாமி ராமச்சந்திரன். இவர் காயிரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஒருபெண் மற்றும் அவருடன் வந்தவர்களுடன் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு பேரம் பேசிக் கொண்டிருந்தார்.இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம்விசாரணை நடத்தியபோது, கெங்குசாமியின் கையில் இருந்தது 18 மாதக் கைக்குழந்தை எனத் தெரியவந்தது. அக்குழந்தையை1000 ரூபாய்க்கு விற்பதற்காக பேரம் பேசிக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
செங்கல்பட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியிடமிருந்து 1000 ரூபாய் கொடுத்து இக்குழந்தையை வாங்கியதாகவும் கெங்குசாமிகூறியுள்ளார். ஆனால் அக்குழந்தையை கெங்குசாமி திருடியிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர்.
கைது செய்யப்பட்ட கெங்குசாமியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தை சமூக சேவைநிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications