ராஜசேகர் மனைவி தற்கொலை வழக்கு: மகள்கள் சாட்சியம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

சிவகாசி ஜெயலட்சுமி மீதான, திண்டுக்கல் முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகர் மனைவி விசாலாட்சி தற்கொலை வழக்கில் ராஜசேகரின் மகள்கள் உள்பட 11 பேர் சாட்சியம் அளித்தனர்.

திண்டுக்கல் டி.எஸ்.பியாக ராஜசேகர் இருந்தபோது சிவகாசி ஜெயலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தை ராஜசேகரின் மனைவி விசாலாட்சி எதிர்த்தார். இந்த நிலையில் அவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

விசாலாட்சியின் தற்கொலைக்குத் தூண்டியதாக ராஜசேகர், ஜெயலட்சுமி மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு விட்டது

இன்று இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. முதலில் ராஜசேகரின் மகள்கள் பவித்ரா, திவ்யா, மாமியார் ஆறுமுகத்தம்மாள், மைத்துனர்கள் தாமோதரன், சேதுலிங்கம், ஓட்டுநர்கள் முருகன், ரவி முருகன், நடராஜன், காவலர்கள் சக்திவேல், பாண்டி, வீரபாண்டி ஆகியோர் சாட்சி அளித்தனர்.

விசாரணைக்காக ராஜசேகர், ஜெயலட்சுமி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+