ஆம்னி பஸ் கட்டணம் கிடு கிடு உயர்வு!
சென்னை:
டீசல் விலை உயர்வு காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது.
மத்திய பெட்ரோலியத் துறை சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை பேருந்துக் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.இருப்பினும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கணிசமாக உயர்ந்து விட்டது. அதேபால ஆட்டோ கட்டணத்தையும்ஓட்டுநர்கள் உயர்த்தி விட்டனர். இதனால் நடுத்தர வர்க்க மக்கள் மேலும் நிதிச் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் ரூ. 10 முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. சாதாரண வகை ஆம்னி பேருந்துகளில் ரூ. 10ம்,சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளில் 30 ரூபாயும் கட்டணம் உயர்ந்துள்ளது. பார்சல்கள் எடுத்துச் செல்லும் கட்டணமும் கணிசமாகஉயர்ந்துள்ளது.
பெங்களூரிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் உயர்ந்துள்ளது.சென்னைக்கு செல்லும் சாதாரண வகை பேருந்துகளில் முன்பு ரூ. 350 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அது ரூ. 360 ஆகஉயர்ந்துள்ளது.
ரயில் கட்டணம் இதுவரை உயர்த்தப்படாத காரணத்தால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று தென்னகரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications