போலி வாக்காளர்கள்: உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்தது தொடர்பான வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ளுமாறு கோரி திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக போலி வாக்காளர்களை சேர்த்ததுதொடர்பாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு தரப்பட்டது. அதன் அடிப்படையில் போலி வாக்காளர்களைசேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய நடவடிக்கைக்குக் தடை கோரி அதிமுக சார்பில் அதன் தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அப்படியே அந்த வழக்குவிசாரிக்கப்பட்டால், அதில் என்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஆற்காடு வீராசாமி.












Click it and Unblock the Notifications