பாக்தாத்: கார் குண்டு வெடித்து 75 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டு வெடித்து 75 பேர் உடல் சிதறி பலியானார்கள். 162 பேர் படுகாயமடைந்தனர்.ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் காஸிமியா மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. தற்கொலைப் படை தீவிரவாதிஒருவன் கார் நிறைய குண்டுகளை நிரப்பிக் கொண்டு உருபா சதுக்கத்தில் வேலைக்காக கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் கூட்டத்தில்காரை செலுத்தினான்.
இதில் குண்டுகள் வெடித்ததில் 75 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 162 பேர் படுகாயம் அடைந்தனர். உள்ளூர்நேரப்படி காலை 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
இதே பாக்தாத்தின் மார்க்கெட் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கார் குண்டு வெடித்ததில் பலர் பலியானார்கள். ஒரு ஆண்டு கழித்துமீண்டும் ஒரு கார் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications