தமிழகத்தில் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிங்கப்பூர், மலேசிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அடங்கிய புத்தகக் கண்காட்சி சென்னை, மதுரை, திருச்சி ஆகியநகரங்களில் நடத்தப்படவுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த காசி புத்தக மையம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. முதலில் வருகிற 16ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம்குட்ஷெப்பர்ட் மேல் நிலைப்பள்ளியில் இந்தக் கண்காட்சி நடைபெறும்.இதைத் தொடர்ந்து மதுரை காலேஜ் ஹவுஸ் விடுதியில் அக்டோபர் 8ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், திருச்சியில் நவம்பர் 10ம் தேதிமுதல் 17ம் தேதி வரையிலும் கண்காட்சி நடைபெறும்.
கிட்டத்தட்ட 30,000 தலைப்புகளில், 500 பதிப்பகங்கள் வெளியிட்ட 3 லட்சம் புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்படவுள்ளதாககாசி புத்தக மையம் தெரிவித்துள்ளது. வரலாறு, ஆன்மீகம், இலக்கியம், மொழியியல், கவிதைகள், கதைகள் என பல்வேறு தலைப்புகளில்புத்தகங்கள் இடம் பறுகின்றன.












Click it and Unblock the Notifications