இலங்கை: தமிழ் போராளிகள் குழு தலைவர் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

மட்டக்களப்பு:

இலங்கை மட்டக்களப்பு நகரில் தமிழ் போராளிகள் குழுத் தலைவர் சிவகுரு நவரத்தினராஜா அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ தமிழ்நெட் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி:

கந்தி என்று அழைக்கப்படும் சிவகுரு நவரத்தினராஜா (வயது 38) புதன்கிழமை மாலை தனது வீட்டின் குளியலறையில் இருந்தபோதுபக்கத்து வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத சிலர் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். கையெறி குண்டுகளையும் அவர்கள்வீசியுள்ளனர். இதில் சிவகுரு ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.

இலங்கை ராணுவ வீரர்கள் அவரை மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிவகுருமரணமடைந்தார். இலங்கை ராணுவத்தின் பலத்த பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மட்டக்களப்பில் போராளித் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1967ம் ஆண்டு செப்டம்பர் 10ம் திேத பிறந்த சிவகுரு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தில் 1983ம் ஆண்டு இணைந்தார். அதன்பின்னர் அந்த அமைப்பு பிளவுபட்டபின் ரஸீக் என அழைக்கப்படும் முத்துலிங்கம் கணேசகுமார் தலைமையிலான பிரிவில் 1996ல்சேர்ந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் தீவிர தேடுதல் வேட்டையில், ரஸீக் பிரிவு போராளிகள் உதவியாக இருந்துவந்தனர். ரஸீக் கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன் பிறகு சிவகுரு தலைமையில்அப்பிரிவு இயங்கி வந்தது.

தொடர்ந்து இலங்கை ராணுவத்தின் 9வது பிரிவுக்கு சிவகுரு தலைமையிலான பிரிவு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்து வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+