விஜயகாந்த் கட்சி பத்திரிக்கை வெளியீடு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் இன்று காலை தொடங்கியுள்ள விஜயகாந்த் ரசிகர் மன்ற அரசியல் மாநாட்டில், கட்சிப் பத்திரிக்கையான அன்பு விஜயகாந்த்வெளியிடப்பட்டது.

மதுரை தோப்பூரில் விஜயகாந்த் ரசிகர் மன்ற முதலாவது அரசியல் மாநாடு இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டின்போது தனதுகட்சியின் பெயரை விஜயகாந்த் அறிவித்தார்.

மாநாட்டின்போது புதிய கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை வெளியிடப்பட்டது. இந்தப் பத்திரிக்கைக்கு அன்பு விஜயகாந்த் எனபெயரிடப்பட்டுள்ளது. இப்பத்திரிக்கையை விஜயகாந்த் தனது கையால் வெளியிட்டார்.

மேலும், கட்சியின் கொடியாக மன்றக் கொடியே நீடிக்கும் என்று கூறிய அவர் கொடியையும் தூக்கிக் காண்பித்தார்.

காலை 10.30 மணியளவில் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சாப்பிடுவதற்காக எழுந்து சென்றனர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகாலியானது. இதைத் தொடர்ந்து ஒரு பத்திரிக்கையின் கேமரா மேன் காலியாக இருந்த இருக்கைகளைப் படம் எடுத்தார்.

இதைப் பார்த்ததும் கோபமடைந்த விஜயகாந்த் மைக்கைப் பிடித்து, காலியாக இருக்கும் இருக்கைகளை ஒருவர் படம் எடுக்கிறார்.விஜயகாந்த் மாநாடு பிசுபிசுத்தது என்று செய்தி போடுவதற்காகவே இவ்வாறு அவர் செய்கிறார். இதற்கு தொண்டர்கள் அனுமதிக்கக்கூடாது. யாரும் கலையாமல் இருந்து மாநாட்டைசிறப்பிக்க வேண்டும் என்று கோபத்துடன் கூறினார்.

விஜயகாந்த்தின் கோபத்தைப் பார்த்த கேமராமேன், ரசிகர்களை நினைத்துப் பயந்து அந்த இடத்தைக் காலி செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+