பாஜக பெயர் கெட்டு விட்டது: வெங்கையா ஒப்புதல்!
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியில் சமீப காலமாக நிலவி வரும் அசாதாரண சூழல்கள் மற்றும் மோதல்களால் கட்சியின் பெயர்பாதிக்கப்பட்டுள்ளது என்று கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒப்புக் கொண்டுள்ளார்.
சென்னை வந்த வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியில் சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் (குஜராத்,ஜார்கண்ட், மதன்லால் குரானா விவகாரங்கள்) கட்சிக்கு ஓரளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. இதைசரிக்கட்ட சென்னையில் நடைபெறவுள்ள 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்தை பாஜக பயன்படுத்திக் கொள்ளும்.நாங்கள் கொள்கை ரீதியிலான, தொண்டர்களைக் கொண்ட கட்சி. எனவே இதுபோன்ற சலசலப்புகளை உடனடியாக சரி செய்யவேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கான பலமும், கால அவகாசமும் எங்களுக்கு உள்ளது.
தேசிய செயற்குழுக் கூட்டத்தின்போது அத்வானி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படும் தகவல்களில்உண்மை இல்லை. அதற்கான அவசியமும் இப்போது எழவில்லை. கட்சியில் தலைமைப் பதவிக்கு பஞ்சமும் இல்லை.இவையெல்லாம் பத்திரிக்கைகள் கிளப்பி விடும் வேலைகள்.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை சென்னை செயற்குழுக் கூட்டம் தீர்மானிக்கும். மேலும், மத்திய காங்கிரஸ் கூட்டணிஅரசின் செயல்பாடுகளையும் நாங்கள் இதில் ஆராய்வோம். மேலும், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பீகார், அஸ்ஸாம்,புதுவை மாநில தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் நாங்கள் விரிவாக விவாதிக்கவுள்ளோம் என்றார்வெங்கையா நாயுடு.












Click it and Unblock the Notifications