மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின் துறை ஊழியர்களுக்கு இன்னும் 2 நாளில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த 2000மாவது ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதியிலிருந்து மின் துறை ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படவேண்டியுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் மின் துறை ஊழியர்களுக்கு மாதம் ரூ. 250 இடைக்கால நிவாரணமாகவழங்கப்பட்டு வருகிறது.தொழிற்சங்கங்கள் 20 முதல் 30 சதவீத ஊதிய உயர்வை கோரி வருகின்றன. ஆனால் அரசு 4 சதவீத ஊதிய உயர்வை மட்டுமே வழங்கமுடியும் என்று கூறி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி மின்வாரியத் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊழியர் சங்கப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து வருகிற 16ம் தேதி மாநில மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைநடத்தவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மின் துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
13 சங்கங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.












Click it and Unblock the Notifications