திரிஷா தொடர்ந்த வழக்கு: பத்திரிக்கை ஆசிரியர் மீது குற்றச்சாட்டுப் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
நெற்றிக்கண் வாரப் பத்திரிக்கையில் தனது ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதாக கூறி நடிகை திரிஷா தொடர்ந்துள்ள வழக்கில்,பத்திரிக்கை ஆசிரியர் மணி உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
நடிகை திரிஷாவின் ஆபாசப் படங்களை வெளியிட்டது தொடர்பாக நெற்றிக்கண் வார இதழின் ஆசிரியர் மணி உள்ளிட்ட 6 பேரைபோலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மணி உள்ளிட்ட 6 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இனி சாட்சிகள் விசாரணை தொடங்கும். அப்போது நடிகை திரிஷாவும் சாட்சியம் அளிக்கவேண்டியிருக்கும். இருப்பினும் போலீஸார் விரும்பினால் மட்டுமே திரிஷா நீதிமன்றம் வரலாம். திரிஷாவை நீதிமன்றத்திற்கு வரவழைத்துசாட்சி சொல்ல அழைப்பது குறித்து போலீஸ் தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.













Click it and Unblock the Notifications