For Quick Alerts
For Daily Alerts
Just In
அண்ணா பிறந்த நாள்: சிலைக்கு தலைவர்கள் மரியாதை
சென்னை:
முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாதுரையின் 97வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் சிறப்பாககொண்டாடப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்.திமுக தலைவர் கருணாநிதி, நிர்வாகிகளுடன் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். எழும்பூரில் உள்ள மதிமுகதலைமைக் கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் கைவசம் இருந்து வந்த தமிழகம், 1967ம் ஆண்டு முதல் திராவிடக் கட்சிகளுக்கு மாறியது. அந்த ஆண்டுநடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அண்ணா தமிழக முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியால் தமிழகஅரியணையைக் கைப்பற்ற முடியவில்லை.
1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி அண்ணா புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.
Comments
Story first published: Thursday, September 15, 2005, 5:30 [IST]