ஆபாச திரைப்பாடல்கள்: வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆபாச திரைப்பாடல்களை எழுதிய கவிஞர்கள் வைரமுத்து, வாலி, பா.விஜய், கபிலன் போன்றோரைத் தண்டிக்கக் கோரிதொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த ரகு என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாகதமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதி வருகின்றனர். இந்தப் பாடல்களை தியேட்டரிலும், வீட்டில் டிவியிலும்கேட்கும் இளைஞர் சமுதாயம் தவறான வழியில் போக வாய்ப்பு உள்ளது.எனவே இதுபோன்ற ஆபாச கருத்துக்கள் அடங்கிய பாடல்களை எழுதும் வைரமுத்து, வாலி, கபிலன், பா.விஜய் போன்றோர் மீதுஈவ் டீசிங் தடுப்புப் பிரிவின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம், இந்தப் பிரச்சினைக்கு இப்படி மனு செய்திருக்கக் கூடாது. பொது நலன்கருதும் மனுவைத் தாக்கல் செய்ய முடியும் என்று கூறி ரகுவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications