கட்சி அலுவலமாகிறது விஜயகாந்த் கல்யாண மண்டபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் கட்சிஅலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதிய நிர்வாகிகளுக்குத் தேவையா அறைகள் அமைக்கப்படும் பணி முழு வீச்சில்நடந்து வருகிறது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், அடுத்து நிர்வாகிகள் தேர்வு செய்வதில்மும்முரமாகியுள்ளார். முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் தீவிரமறைமுக எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள விஜயகாந்த், அக்கட்சியினரை சமாளித்து செயல்படக் கூடிய திறமை படைத்தவர்களை தனதுகட்சிக்கு நிர்வாகிகளாக நியமிக்க முடிவு செய்துள்ளார்.

அதற்கு முன்னதாக, கட்சி அலுவலகத்தை புதிய பொலிவுடன் நிர்மாணிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கோயம்பேட்டில் உள்ளவிஜயகாந்த்துக்குச் சொந்தமான கல்யாண மண்டபம்தான் கட்சி அலுவலகமாக திகழப் போகிறது.

இதையடுத்து கல்யாண மண்டபமாக இருந்த அதை கட்சி அலுவலகமாக மாற்றும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்குபுதிய நிர்வாகிகளுக்கான அறைகள் அமைக்கப்படுகின்றன. கட்சித் தலைவர், பொதுச் செயலாளர், மகளிர் அணி, வழக்கறிஞர்அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்களுக்கு தனித் தனி அறைகள் ஒதுக்கப்படவுள்ளன.

இதுதவிர ஆலோசனைக் கூட்டங்கள், செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக மண்டபத்தின் ஒரு பகுதிகூட்ட அரங்கமாக மாற்றப்படுகிறது.

கட்சித் தலைவராக விஜயகாந்த் இருப்பார், பொதுச் செயலாளராக ராமு வசந்தன் இருப்பார். மற்ற நிர்வாகிகள் தேர்வு விரைவில்நடைபெறவுள்ளது.

சென்னையில் உள்ள மிகப் பெரிய கட்சி தலைமை அலுவலகங்களில் ஒன்றாக இதன் மூலம் விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம்மாறுகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பிரமாண்டமான கட்சித் தலைமை அலுலகங்கள் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+