அதிமுகவிலிருந்து தே.மு.தி.க.வுக்கு தாவும் முதல் தலை!
சென்னை:
விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியில் சேரும் முதல் அரசியல்வாதி என்ற பெருமை அதிமுகவைச் சேர்ந்தமுன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமாருக்குக் கிடைத்துள்ளது.
சென்னை தி.நகர் சட்டசபைத் தொகுதியில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்தவர்எஸ்.ஜெயக்குமார். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அரசுக் கொறடாவாக பதவி வகித்துள்ளார்.மதுரையில் நடந்த விஜயகாந்த் கட்சி மாநாட்டிற்கு வந்திருந்த ஜெயக்குமார் அப்போது கட்சியில் சேருவது குறித்து எதுவும்தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த்தை இன்று சந்தித்து அவர் முன்னிலையில் தே.மு.தி.க.வில் சேரப் போவதாகஅவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கொள்கைகள், லட்சியங்கள் எனக்கு மிகவும்பிடித்துள்ளன. தமிழகத்தை முன் மாதிரி மாநிலமாக்கத் தேவையான அனைத்து விஷயங்களையும் விஜயகாந்த் கூறியுள்ளார்.எனவே அதிமுகவிலிருந்து விலகி விஜயகாந்த்துடன் என்னை இணைத்துக் கொள்ளவுள்ளேன் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.
மதுரையில் புதன்கிழமை தொடங்கப்பட்ட விஜயகாந்த் கட்சியில் இதுவரை பிற கட்சியைச் சேர்ந்த யாரும் தங்களை இணைத்துக்கொள்ளவில்லை. அப்படிச் சேரும் முதல் அரசியல் பிரமுகர் ஜெயக்குமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் அதிமுகவைச்சேர்ந்தவர் என்பது அதை விட விசேஷமானது.












Click it and Unblock the Notifications