For Daily Alerts
Just In
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: கி.வீரமணி
சென்னை:
உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும்போது சமூக நீதிக் கண்ணோட்டம் அவசியம் தேவைஎன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளஆர்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக 19 நீதிபதி பணியிடங்கள்காலியாக உள்ளன. வரிசையாக நீதிபதிகள் ஓய்வு பெற்று வருகின்றனர். இப்பணியிடங்களுக்கு இன்னும் நீதிபதிகள்நியமிக்கப்படாமல் உள்ளனர்.
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதிக் கண்ணோட்டம் இருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களை நிரப்புவதில் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அதி தீவிர கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வழக்குகளின் தேக்கம் மட்டுமல்ல நீதி வழங்குவதில்தாமதமும் ஏற்பட்டு பாதிப்புகள் எதிர்பாராத வகையில் அமைந்து விடக் கூடும் என்று கூறியுள்ளார் வீரமணி.
Story first published: Thursday, September 15, 2005, 5:30 [IST]