எம்.ஜி.ஆர். வேனில் விஜயகாந்த் பிரசாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பயன்படுத்தி வந்த பிரசார வேனில், டிசம்பர் 1ம் தேதி முதல் கிராமம் கிராமமாக சென்று மக்களைசந்திக்கப் போவதாக நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர்.தனது அரசியல் பயணங்கள், தேர்தல் பிரசாரங்களின்போதுபயன்படுத்தி வந்த பிரசார வேன் தற்போது விஜயகாந்த் வசம் உள்ளது. இந்த வேனை கடந்த 1994ம் ஆண்டு, எம்.ஜி.ஆரின்மனைவி ஜானகி ராமச்சந்திரன், விஜயகாந்த்துக்கு தனது பரிசாக வழங்கியிருந்தார்.

மதுரை மாநாட்டில் இந்த வேனுடன் விஜயகாந்த் வந்தார். இந்த வேனில் இருந்தபடியே கட்சிக் கொடியையும் ஏற்றினார்.டி.எம்.டபிள்யூ 2005 என்ற எண் கொண்ட இந்த வேனை பயன்படுத்துவது ராசியாக இருக்கும் என்பதால் இனிமேல் தனதுபிரசாரங்களுக்கு எம்.ஜி.ஆர் வேனையை விஜயகாந்த் பயன்படுத்தப் போவதாக கூறப்பட்டுள்ளது.

வேனின் எண்ணும், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்துள்ள வருடமும் ஒன்றாக இருப்பதும் சரியான பொருத்தம் என்று விஜயகாந்த்ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த வேன் மூலம் டிசம்பர் 1ம் தேதி முதல் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து தனது கட்சியைவளர்க்கப் போவதாகவும் விஜயகாந்த் ஏற்கனவே கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய இந்த வேனைப் பார்க்க மதுரை மாநாட்டிற்கு வந்திருந்த ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டினர்.

கருணாநிதி வாழ்த்து: விஜயகாந்த் புதுக் கட்சியை தொடங்கியிருப்பதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள், நடிகர், நடிகையர் விஜயகாந்த்துக்கு வாழ்த்துத்தெரிவித்து தந்தி அனுப்பியிருந்தனர். மொத்தம் 4446 வாழ்த்துத் தந்திகள் மதுரை மாநாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டில் நன்றியுரையாற்றிய விஜயகாந்த், மாநாட்டுக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக காவல்துறைக்கும், முதல்வர்ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+