3 மாவட்டங்கள் நீங்கலாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை:
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல்ஆணையம் இன்று வெளியிட்டது.
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் முழுமையான வாக்காளர்பட்டியல் திருத்தமும், பிற தொகுதிகளில் சரி பார்ப்பும் நடந்தது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல்இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களின் பெயர்களைநீக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக 3 மாவட்டங்களில் மட்டும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல்வெளியிடப்படவில்லை.
இந்தப் பணிகள் முடிவடைந்ததும் வாக்காளர் பட்டியல் அச்சடிக்கும் பணி முடிவடைந்த பின்னர் வருகிற 20ம் தேதி இந்த மூன்றுமாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
தபால் நிலையங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகம், ஒன்றியஅலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications