For Daily Alerts
Just In
இன்று திமுக மகளிர் பேரணி
சென்னை:
சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் இன்றுமாபெரும் மகளிர் பேரணி நடத்தப்படுகிறது.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றக் கோரி சென்னையில் லட்சக்கணக்கில் மகளிரைத் திரட்டி தனது தலைமையில்மாபெரும் பேரணி நடத்தப்படும் என சமீபத்தில் நடந்த வேலூர் மண்டல மாநாட்டில் கருணாநிதி அறிவித்தார்.அதன்படி இன்று மாலை 3 மணிக்கு இந்தப் பேரணி சென்னையில் தொடங்குகிறது. மன்ரோ சிலையில் தொடங்கி சேப்பாக்கம்விருந்தினர் மாளிகை அருகே பேரணி முடிகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குணபாண்டியன் பேரணிக்குத் தலைமைதாங்குகிறார். கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
பேரணியை தனி மேடையில் அமர்ந்தபடி கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள் பார்வையிடுகிறார்கள்.தமிழகம் முழுவதிலுமிருந்து திமுக மகளிர் அணியினர் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
பேரணியின் முடிவில், ஆளுநர் பர்னாலாவை கருணாநிதி சந்தித்து இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி மனுகொடுக்கிறார்.
Comments
Story first published: Thursday, September 15, 2005, 5:30 [IST]