கோவை சிறைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மத்திய சிறைச்சாலைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளஅறைகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
கோவையில் உள்ள மத்திய சிறையில் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதான 167 பேரும் அடங்குவர். இவர்கள் மற்ற கைதிகளுடன் வைக்காமல் தனியாகவைக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில் கோவை சிறைக்கு மதானி ஆதரவாளர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் தீவிரசோதனை நடத்தினர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்துமோப்பா நாய்களுடன் போலீஸார் சிறைக்கு விரைந்தனர். கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள் அனைத்தையும் தீவிரமாகசோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இறுப்பினும் முன்னேற்பாடாக சிறைக்கு பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications