கர்நாடகத்தின் ஹோகனேக்கல் ஊடுறுவல்: அதிகாரிகள் சந்திப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஹோகனேக்கல் அருவிக்கு அருகே உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான மலைப் பகுதிகளை கர்நாடக அரசுஉரிமை கொண்டாடுவது தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாக 19ம் தேதி சர்வேமேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் ஹோகனேக்கல் உள்ளது. கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, ஹோகனேக்கல்வழியாகத்தான் தமிழகத்திற்குள் நுழைகிறது. காவிரி நுழையும் இடத்தில் ஹோகனேக்கல் அருவி உள்ளது. இது சுற்றுலாத்தளமாகவும் விளங்கி வருகிறது.இந்த நிலையில் ஹோகனேக்கல் பகுதியில் உள்ள சில இடங்களில் தமிழக மீனவர்கள், பரிசல் ஓட்டிகள் சென்றபோது அவர்களைகர்நாடக வனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அருவியில் குளிக்க வருவோரின் வசதிக்காக இரும்புக் கம்பிகளை கொண்டு தடுப்பு அமைக்கும் பணியில் சிலஊழியர்களை தமிழக சுற்றுலாத்துறை ஈடுபடுத்தியது. ஆனால் திடீரென அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் ஊழியர்களைவிரட்டி விட்டு, இரும்புக் கம்பிகள், கடப்பாறைகளை ஆற்றில் எறிந்து விட்டது.
கர்நாடக வனத்துறையினரின் இந்தச் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினைக்கு முடிவு கட்டும்வகையில், தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுதீப் ஜெயின், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயராம், வனத்துறைஅதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர், கர்நாடக வனத்துறை குழுவினரை ஹோகனேக்கலுக்கு வரவழைத்துப் பேசினர்.
ஹோகனேக்கல் பகுதியில் கர்நாடகத்தினர் ஊடுறுவியுள்ள பகுதிகள் தமிழகத்திற்குச் சொந்தமானவை என்று வரைபடத்துடன்கர்நாடக குழுவினருக்கு விளக்கிக் கூறினர். இருந்தும் கர்நாடக தரப்பினர் அவை தங்களுக்கு சொந்தமான இடம் என்றுபிடிவாதமாக கூறினர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து வருகிற 19ம் தேதி இரு மாநில சர்வே அதிகாரிகளைக் கொண்டு எல்லைப் பகுதி குறித்து சர்வே நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications