சுவாமி ஏற்படுத்திய சலசலப்பு!
சென்னை:
சென்னையில் தொடங்கிய பாஜக செயற்குழுக் கூட்டம் நடந்த ஹோட்டலுக்கு திடீரென ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி வந்ததால் பாஜகவினரிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை சவேரா ஹோட்டலில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. காலை முதலேதலைவர்கள் வரத் தொடங்கினர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத ஒரு பிரமுகர் சவேரா ஹோட்டலுக்கு வந்து இறங்கினார்.அவரைப் பார்த்ததும் கூடியிருந்த பாஜகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.சலசலப்பை ஏற்படுத்தியவர் சாட்சாத் சுப்ரமணிய சுவாமியேதான். ஹோட்டலுக்குள் சென்றவர் நேராக முன்னாள் அமைச்சர் முரளிமனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்த கொண்டனர்.
அவர்களிடையே சுவாமி பேசுகையில், நான் வந்ததில் விசேஷம் எதுவும் இல்லை. முரளி மனோகர் ஜோஷி எனது நீண்ட நாளையநண்பர். அவரைப் பார்க்கத்தான் வந்தேன்.
ரோம் சக்திக்கு (சோனியா காந்திக்கு) எதிராக ஓம் சக்தியை, அதாவது இந்துக்களைத் திரட்ட வேண்டியுள்ளது. அதுதொடர்பாகஜோஷியிடம் பேசினேன். பாஜக செயற்குழுக் கூட்டத்தில் சங்கராச்சாரியார் கைதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனநினைக்கிறேன். அவ்வளவுதான் என்று கூறி விட்டுச் சென்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications