ஆதரவு தாரீர்! ஈரோட்டில் விஜயகாந்த் பேச்சு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சிக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என ஈரோடு அருகே பொதுமக்கள் மத்தியில்நடிகர் விஜயகாந்த் பேசினார்.
புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த் முதல் பயணமாக ஈரோடு சென்றுள்ளார். ஈரோடு செல்வதற்கு முன்பு சித்தோடு என்றஇடத்தில் அவர் வந்தபோது அங்கு பெரும் திரளான ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.தங்களிடையே பேசுமாறு அவர்கள் கோரவே, விஜயகாந்த் தனது வேனில் இருந்தபடியே அவர்களிடம் பேசினார். அப்போது,என்னைப் பார்ப்பதற்காக அதிகாலையிலேயே இவ்வளவு பேர் கூடியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் உங்களுக்காகத்தான்கட்சி தொடங்கியுள்ளேன்.
உங்களது ஆதரவு எனக்கும், எனது கட்சிக்கும் கண்டிப்பாக தேவை. அதை நீங்கள் தருவீர்கள். நான் ஈரோடு செல்வதால்இன்னொரு முறை உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன், நன்றி என்று கூறி கிளம்பினார்.












Click it and Unblock the Notifications