ஹரிஷ் ராகவேந்திராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
பின்னணி பாடகர் ஹரிஷ் ராகவேந்திராவின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தலைப்பிரசவத்திற்காக மலேசியா சென்ற மனைவி உமாதேவி தன்னோடு சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு கோரி ஹரிஷ்ராகவேந்திரா உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
மலேசியாவிலிருந்து சென்னை வந்த உமாதேவி, கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஹரிஷ் மீது புகார்கூறியிருந்தார். இந்நிலையில் ஹரிஷ் ராகவேந்திரா முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
போலீசார் கைது செய்யலாம் என அஞ்சுவதால் முன் ஜாமீன் கேட்பதாக அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்குவந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் மாதவன் அவகாசம் கேட்டதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுதரப்பு வழக்கறிஞர், ஹரிஷ் மீது, வழக்குபதிவு செய்யவில்லை என்று கூறினார்.இதனையடுத்து நீதிபதி நாகப்பன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications