For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிச்சைக்காரர்கள் கைகலப்பு! பிச்சை கொடுத்தவருக்கு மண்டை உடைப்பு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அருகே பிச்சை எடுத்து வந்த காசைப் பங்கிட்டுக் கொள்வதில் பிச்சைக்காரர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டு அந்த ஏரியாவையே கலக்கி விட்டனர்.

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் நுழைவாயிலில் ஏராளணான பிச்சைக்காரர்கள் பக்தர்களிடம் பிச்சைஎடுத்தனர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற தொழிலதிபர் ஒரு பிச்சைக்காரரிடம் கணிசமான தொகையைக் கொடுத்துஅனைவரும் பங்கிட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த 15 பிச்சைக்காரர்களும் ஒன்றாக கூடி பணத்தைப் பங்கிட ஆரம்பித்தனர். ரவீந்திரன் கூடவே அங்குநின்றுள்ளார். அவர்களில் சீனியர்களான வீராசாமியும், அவரது மனைவி செல்வியும் தாங்கள் நீண்ட காலமாக இங்கு பிச்சைஎடுத்து வருவதால் தங்களுக்கு அதிக தொகை வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு மற்ற பிச்சைக்காரர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து அவர்களுக்கிடையே மோதல் மூண்டது. இந்த நிலையில்,வீராசாமியும், செல்வியும் இந்தப் பிரச்சினைக்கு நீங்கள்தானே காரணம் என்று கூறி ரவீந்திரனை கட்டையால் எடுத்துத் தாக்கஆரம்பித்துள்ளனர்.

நிலைகுலைந்த ரவீந்திரன் அலற ஆரம்பித்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்துகோவில் மேலாளர் ஸ்ரீதர் அங்கு விரைந்து வந்த ரவீந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீஸாருக்கும்தகவல் கொடுத்தார்.

போலீஸார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட பிச்சைக்காரர்களை காவல் நிலையத்திற்கு அள்ளிச் சென்றனர். அங்கு வைத்துஅவர்களை எச்சரித்த பின்னர் வெளியே அனுப்பினர். பிச்சைக்காரர்களிடம் கொடுக்கப்பட்ட பணம் என்ன ஆனது என்றுதெரியவில்லை!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X