சாதியை ஒழிக்க சாகவும் தயார்: விஜயகாந்த் சபதம்!
ஈரோடு:
சாதியை ஒழிப்பதற்கு சாகக் கூட தயார் என்று ஈரோட்டில் உள்ள பெரியார் சிலை முன்பு, நடிகர் விஜயகாந்த் சபதம் ஏற்றுக் கொண்டார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், மதுரையில் அண்ணா பிறந்த நாளன்று அவரது சிலைக்குமாலை அணிவித்தார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை ஈரோடு சென்றார். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விஜயகாந்த்,சிலை முன்பு சபதம் எடுத்துக் கொண்டார்.சாதியை ஒழிக்க சாகவும் தயார் என்று கூறி விஜயகாந்த் சபதம் ஏற்றார். அவரைப் போலவே தொண்டர்களும் சபதம் ஏற்றனர். பின்னர்கூடியிருந்த ரசிகர்களிடையே விஜயகாந்த் பேசுகையில், சாதி, மதத்திற்கு எதிராக புரட்சி தீபம் ஏற்றுங்கள் என்று கூறினார் பெரியார். அதைநினைவுபடுத்தும் வகையில்தான் எனது கட்சிக் கொடியில் தீபம் இடம் பெற்றுள்ளது என்று கூறினார்.
ஈரோடு பயணத்தை முடித்துக் கொண்ட விஜயகாந்த் கோவை திரும்பி அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னைக்குவந்த விஜயகாந்த்திற்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் ஏராளமான பேர் கூடி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
சென்னை திரும்பியுள்ள விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகளில் மும்முரமாக இறங்கவுள்ளார்.