சென்னையில் பிரமாண்ட மாநாடு: விஜயகாந்த் முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரையைத் தொடர்ந்து சென்னையிலும் பிரமாண்டமான மாநாட்டை நடத்த நடிகர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி நடந்த மாநாட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியை அறிவித்தார் விஜயகாந்த்.இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அதற்கு முன்பாக சென்னையில் பிரமாண்டமான மற்றொரு மாநாட்டை நடத்த விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசியல்தலைநகர் எனக் கூறப்படும் மதுரையில் கட்சியைத் தொடங்கியுள்ளதன் மூலம் தமிழகத்தைத் தன்பக்கம் திருப்பியதைப் போல, தனதுகட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் ஆகியவற்றை விளக்க சென்னையில் ஒரு மாநாட்டை நடத்தி அகில இந்திய அளவில் தன் மீதுகவனத்தைத் திருப்ப விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

சென்னையில் எப்போது மாநாடு நடத்தப்படும் என உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் டிசம்பருக்குள் மாநாடு நடத்தப்படலாம்என கூறப்படுகிறது. அதற்கு முன்பாக கட்சியை பலப்படுத்தும் வேலையிலும் விஜயகாந்த் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

முதலில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், ரசிகர்களுக்கு கட்சி உறுப்பினர் பதவிக்கான அடையாளச் சீட்டு வழங்கும்பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. மொத்தம் 40 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளிலும் விஜயகாந்த் தீவிரமாக இறங்கியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+