குருப் பெயர்ச்சி: ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்!

Subscribe to Oneindia Tamil

ஆலங்குடி (திருவாரூர்):

கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயரும் குருப் பெயர்ச்சி இன்று நடந்தது. இதையொட்டி குரு பகவானின்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அத்தகைய சிறப்புப் பெற்ற குரு பகவான் கன்னி ராசியிலிருந்து, துலாம் ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இன்று அந்த குருப் பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்புப் பூஜைகள்,பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.

காலை 8.50 மணி குரு பகவான் கன்னியிலிருந்து, துலாமுக்கு இடம் பெயர்ந்தார். குருப் பெயர்ச்சியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள்ஆலங்குடி கோவிலுக்கு வந்து குவிந்தனர்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், காவல்துறையும் செய்திருந்தன.

இதேபோல, தஞ்சை மாவட்டம் திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலிலும் குருப் பெயர்ச்சியையொட்டி குரு பகவானுக்கு சிறப்புஅபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதேபோல, சூரியனார் கோவிலிலிலும் குருப் பெயர்ச்சியையொட்டி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இங்கும் ஆயிரக்கணக்கானபக்தர்கள் குவிந்திருந்தனர்.

இந்த குருப் பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகள் உண்டாகும் என்றும், மற்றராசிக்காரர்களுக்கு பலன்கள் குறைவாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+