மத்திய உதவிகளை மறுக்கும் ஜெ.: கருணாநிதி புகார்
திருநெல்வேலி:
திமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமே என்ற காரணத்திற்காக மத்திய அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் ஏற்கமுதல்வர் ஜெயலலிதா மறுத்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கோவில்பட்டி முதல் பனகுடி வரையிலான சாலையை நான்கு வழிப் பாதையாக மாற்றும் திட்டத் தொடக்க விழாநான்குநேரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூர் என்ற இடத்தில் நடந்தது.இதில் கலந்து கொண்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் கருணாநிதி. நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நன்றி உணர்வு அனைவரிடத்திலும்அவசியம் வேண்டும். அது இல்லாமல் போனால் நல்ல பணிகளுக்கு தடைக்கல்லாக மாறி விடும். திமுக ஆட்சியின் சாதனைகளைதனுஷ்கோடி ஆதித்தன், அப்பாவு எம்.எல்.ஏ. ஆகியோர் பாராட்டிப் பேசினர். அவர்களுக்கு எனது நன்றிகள்.
தமிழகத்திற்கு எத்தனையோ திட்டங்களை செய்ய மத்திய அரசு காத்திருக்கிறது. செய்தும் வருகிறது. ஆனால், இன்றைய அரசோ அதைஏற்கும் மன நிலையில் இல்லை. தூத்துக்குடி துறைமுகத்தை ரூ. 650 கோடியில் புதுப்பிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் அதைஏற்க தமிழக அரசு மறுக்கிறது.
இதுவே நான் முதல்வராக இருந்திருந்தால் வடக்கு நோக்கி ஒரு வணக்கம் செலுத்தியிருப்பேன். ஆறு கோடித் தமிழர்கள் சார்பில் நன்றிதெரிவித்திருப்பேன். திமுகவுக்கு நல்ல பெயர் வந்து விடுமே என்ற எண்ணத்தால் இதுபோன்ற பல திட்டங்களை, உதவிகளை இந்த அரசுஏற்க மறுக்கிறது.
நான்கு வழிச் சாலைப் பணிகளை விரைவில் தொடங்கி நிறைவேற்றிட வேண்டும். அடிக்கல்லை நாட்டி விட்டு பணிகளை முடிக்காவிட்டால்வருவோரெல்லாம் அதைப் பார்த்து நகைப்பர் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமைச்சர் டி.ஆர்.பாலு, எம்.பிக்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், தனுஷ்கோடி ஆதித்தன்,ராதிகா செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.