தமிழக பஸ் எரிப்பு: மதானி கட்சி பிரமுகர் கைது
கொச்சி:
தமிழக அரசுப் பேருந்து கேரளாவில் எரிக்கப்பட்டது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை கேரள போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கொச்சியிலிருந்து சேலம் செல்வதற்காக கிளம்பிய தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து, கடந்த வாரம் எர்ணாகுளம் அருகேசிலரார் கடத்தப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்அப்துல் நாசர் மதானியின் ஆதரவாளர்கள்தான் இந்த கொடும் செயலைச் செய்தவர்கள் என போலீஸார் சந்தேகித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கணக்கானோரிடம் கேரள போலீஸ் தனிப்படை விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் மக்கள்ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷெரீப் என்பவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். இவர் மக்கள் ஜனனாயகக் கட்சியின்அலுவா பகுதி செயலாளராக இருக்கிறார்.
தானும், மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சிலரும்தான் பேருந்தைக் கடத்தித் தீவைத்து எரித்ததாக ஷெரீப் ஒத்துக் கொண்டுள்ளதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர். மதானியின் விடுதலையைக் கோரி இவ்வாறு செய்ததாக ஷெரீப் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பேருந்து எரிப்புச் சம்பவத்தில்தங்களது கட்சிக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று மதானி கட்சியினர் மறுத்த வந்தனர். இந்த நிலையில் அக்கட்சியின் முக்கியப்பிரமுகர் ஒருவர், தாங்கள்தான் பேருந்துக்கு தீவைத்தோம் என ஒத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.