ஜெ. குறித்து அவதூறு பேச்சு: பாமக எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு
திண்டிவனம்:
கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்ட அதிமுக பொதுக் கூட்டத்தில் புகுந்து கலாட்டா செய்ததோடு, முதல்வர் ஜெயலலிதாகுறித்து தரக்குறைவாக பேசியதாக பாமக எம்.பி. தனராஜ், எம்.எல்.ஏக்கள் வேல்முருகன், எடப்பாடி கணேசன் உள்ளிட்ட 9 பேர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திண்டிவனம் பகுதியில் சமீபத்தில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவையும், கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தையும்தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும்அவரது மகன் அன்புமணி ஆகியோரை அதிமுக பிரமுகர்கள் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.இதனால் கோபமடைந்த பாமகவினர் பொதுக் கூட்டத்திற்குள் புகுந்து கலாட்டாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா,அமைச்சர் சண்முகம் ஆகியோரை தரக்குறைவாக பேசியும், அதிமுக பொதுக் கூட்டத்தில் புகுந்து கலாட்டா செய்ததாகவும் கூறிதிண்டிவனம் பாமக எம்.பி. தன்ராஜ், பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், இடைப்பாடி எம்.எல்.ஏ. கணேசன் ஆகியோர் மீது திண்டிவனம்நகர அதிமுக செயலாளர் தேவநாதன் போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில், 4 பாமகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், தன்ராஜ், வேல்முருகன், கணேசன் உள்ளிட்ட 9 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து திண்டிவனத்தில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு அதிக அளவில் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications