ரயில் கட்டணம் உயராது: வேலு உறுதி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ரயில் கட்டணத்தை உயர்த்தும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர்ஆர்.வேலு கூறியுள்ளார்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டீசல் விலைஉயர்வால் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ. 245 கோடி செலவு பிடிக்கும். இருப்பினும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம்அரசுக்கு இல்லை.அதேசமயம், சரக்கு கட்டணத்தை உயர்த்தும் எண்ணமும் இல்லை. இருப்பினும் சரக்கு சேவையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் வரும் கூடுதல் வருவாயைக் கொண்டு செலவுகள் சமாளிக்கப்படும்.
தென்னக ரயில்வேயின் கீழ் உள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்படாத வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் டிக்கெட் வழங்கும்வசதியை ஏற்படுத்த ரூ. 8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 350 ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக இந்த வசதி ஏற்படுத்தப்படும்என்றார் வேலு.












Click it and Unblock the Notifications