சுனாமி நிதி: ரூ. 15 கோடி மோசடி - நடிகர் கொடுத்த செக்கும் திரும்பியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுனாமி நிவாரண நிதிக்காக தமிழக அரசிடம் வழங்கப்பட்ட ரூ. 15 கோடி மதிப்பிலான காசோலைகள் சம்பந்தப்பட்டவர்களின் கணக்குகளில்பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டன. இதில் தமிழக முன்னணி நடிகர் ஒருவரின் காசோலையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சுனாமி தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரதசிடம் ஏராளமானோர்சுனாமி நிவாரண நிதியை வழங்கினர். அனைவருமே காசோலைகளாக தந்தனர். பலர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்த்து அவரிடம்தங்களது காசோலைகளைத் தந்தனர்.

கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வரை சுனாமி நிதிக்காக முதல்வரிடம் வழங்கப்பட்டது. முதல்வரிடம் வழங்கப்பட்ட மற்றும் தலைமைச்செயலகத்திற்கு வந்து சேர்ந்த காசோலைகளை தமிழக அரசு வங்கியில் போட்டது. அதில், ரூ. 15 கோடிக்கான காசோலைகள்சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டன.

இதில் பிரபல நடிகர் ஒருவர் வழங்கிய ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும் அடங்கும். நடிகர்கள் விஜய், அஜீத், பிரஷாந்த் ஆகியோர் தலாரூ. 5 லட்சம் கொடுத்தனர். விஜயகாந்த் ரூ. 10 லட்சம் கொடுத்தார்.

காசோலை திரும்பி வந்தவர்களிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. காசோலை திரும்பி வந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+