For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொண்டரின் குடும்பத்தை தத்தெடுத்தார் விஜயகாந்த்!

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

மதுரை மாநாட்டுக்கு வந்தபோது விபத்தில் சிக்கிப் பலியான தொண்டரின் குடும்பத்தை தத்தெடுத்துள்ளார் நடிகர் விஜயகாந்த்.

மதுரையில் நடந்த விஜயகாந்த் ரசிகர் மன்ற அரசியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்டம்சோளக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ரசிகர், மற்ற ரசிகர்களுடன் சேர்ந்து மதுரை புறப்பட்டார்.

வழியில் அவர் விபத்தில் சிக்கி இறந்தார். இதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த் அதிர்ச்சி தெரிவித்தார். இந்த நிலையில் கோவைக்குஞாயிற்றுக்கிழமை வந்த விஜயகாந்த் ஆறுமுகத்தின் வீட்டுக்குப் போனார். அங்கு குடம்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஆறுமுகத்தின் மனைவி வாய் பேச முடியாதவர் என்பதை அறிந்த விஜயகாந்த் துயரமடைந்தார். பின்னர் ஆறுமுகத்தின் மகளைத் தூக்கி தனதுமடியில் வைத்துக் கொண்ட அவர், இக்குழந்தை இனிமேல் எனது குழந்தை போல, இதற்கான படிப்புச் செலவு, திருமணச் செலவு ஆகியஅத்தனைப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். குடும்பத்தையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுமுகம்குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார்.

அதன் பிறகு அங்கிருந்து கிளம்பிய விஜயகாந்த், அன்னூர் அருகே உள்ள கருவனூர் தர்ஹாவுக்கு சென்று வழிபட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X