For Daily Alerts
Just In
விமான பயணிகளிடம் ரூ. 30 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
சென்னை:
மும்பையிலிருந்து சென்னை வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 2 பயணிகளிடமிருந்து ரூ. 30 லட்சம் பணத்தைவருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மும்பையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் பயணிக்கும் இரு பயணிகள் பணத்துடன் வருவதாக வருமான வரித்துறைஅதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
மும்பை விமானம் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது இருவரும் வைத்திருந்தசூட்கேஸில் ரூ. 30 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
அந்தப் பணம் குறித்து கேட்டபோது இருவரும் முரண்பாடாக பேசவே அப்பணத்தை பறிமுதல் செய்தனர். இருவரும் பின்னர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கொண்டு வந்தது ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Comments
Story first published: Tuesday, September 20, 2005, 5:30 [IST]