For Daily Alerts
Just In
இளங்கோவனைக் கண்டித்து கழுதை ஊர்வலம்!
கோவை:
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை மாற்ற வேண்டும் என்று கோரியுள்ள மத்திய அமைச்சர்இளங்கோவனைக் கண்டித்து அவரது வீட்டுக்கு கழுதைகள் ஊர்வலம் நடத்தப்படும் தமிழக இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் குல்பி தங்கராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதாவது பரபரப்பாக பேசி மற்றவர்களை தன் பக்கம் பார்க்கச் செய்யவேண்டும் என்ற விளம்பரப் பிரியர்தான் இளங்கோவன். தனக்கு ஏதாவது சிக்கல் வந்தால் அதை திசை திருப்ப எதையாவதுபேசுவது அவரது வழக்கம். இது கட்சித் தொண்டர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.இப்படித்தான் கருணாநிதியை விமர்சனம் செய்து விட்டு பின்னர் மன்னிப்பு கேட்டு அவரை நேரில் பார்த்து வருத்தம்தெரிவித்தார் இளங்கோவன். அப்படிப்பட்ட அதி புத்திசாலியான இளங்கோவன் இப்போது எஸ்.ஆர்.பி மீது பாய்ந்துள்ளார்.
எஸ்.ஆர்.பி. பற்றிப் பேச இளங்கோவனுக்கு அருகதை, தகுதி இல்லை. இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிசோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு 2000 தந்திகள் அனுப்பப் போகிறோம். மேலும், இளங்கோவனைக் கண்டித்துஈரோட்டில் உள்ள அவரது வீடு நோக்கி கழுதைகள் பேரணியும் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் தங்கராஜ்.
Comments
Story first published: Tuesday, September 20, 2005, 5:30 [IST]