காவலரின் வாக்கி டாக்கி மிஸ்ஸிங்: ஜெயலட்சுமி வீட்டில் சோதனை!
மதுரை:
சிவகாசி ஜெயலட்சுமி வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த பெண் காவலரின் வாக்கி டாக்கி காணாமல் போனது. இது மதுரைகாவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20க்கும் மேற்பட்ட போலீஸார் மீது சரமாரியான புகார்களை சுமத்திய சிவகாசி ஜெயலட்சமி மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தனதுவீட்டில் இருக்கிறார். அவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் போலீஸார் பாதுகாப்பு அளித்துவருகின்றனர்.மொத்தம் 6 போலீஸார் ஷிப்ட் முறையில் ஜெயலட்சுமியின் வீட்டில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குதுப்பாக்கி, வாக்கிடாக்கி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
அப்படிப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள ஒரு பெண் காவலர், தனது வாக்கி டாக்கியை தொலைத்து விட்டார். ஜெயலட்சுமிவீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது வாக்கி டாக்கி தொலைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உதவி ஆணையர் மணிவண்ணன் தலைமையில் போலீஸார் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமைகாலை சென்றனர். வாக்கி டாக்கியைத் தொலைத்த காவலரிடம் மணிவண்ணன் விசாரணை நடத்தினார். பின்னார்ஜெயலட்சுமியின் வீடு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் வாக்கி டாக்கி சிக்கவில்லை.
வாக்கி டாக்கி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஜெயலட்சுமியும் கூறியுள்ளார். எனவே வேறு யாரோ இதை திருடிச்சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.