ஆட்டுக் குட்டிக்கு மட்டும் கருணையா? ஜெ.வுக்கு கருணாநிதி கேள்வி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காரில் அடிபட்ட ஆட்டுக்குட்டியிடம் கருணையைக் காட்டும் ஜெயலலிதா, 10,000 சாலைப் பணியாளர்களின் குடும்பங்களைப்பட்டினி போட்டு வருவது நியாயமா என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையில் தனது காரில் அடிபட்ட ஆட்டுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கஉத்தரவிட்ட ஜெயலலிதாவின் கருணை கொடி கட்டிப் பறக்கிறது. ஆனால், 10,000 சாலைப் பணியாளர்கள், 13,000 மக்கள் நலப்பணியாளர்கள் பணியிலிருந்து விரட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகி, அவர்களது குடும்பங்கள் வறுமையாலும், பசியாலும்செத்துக் கொண்டிருக்கின்றன.அவர்களில் 70 பேர் இதுவரை வறுமை, பசியால் இறந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது இன்னும் முதல்வருக்கு கருணை உள்ளம்வரவில்லை, மனம் இரங்கவில்லை.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒரே நாளில் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்தபோது முதல்வரின்கருணை உள்ளம் எங்கே போயிருந்தது? அவர்களின் வீடுகளை காலி செய்யுமாறு போலீஸார் சித்திரவதை செய்தபோதுமுதல்வரின் கருணை உள்ளம் எங்கே சென்றிருந்தது? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications