இளங்கோவன் கூறியது தவறு: குமரிஅனந்தன்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியுள்ள கருத்துக்கள் தவறானவை, தேவையில்லாதவை என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர்குமரி அனந்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபை காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை நீக்க வேண்டும் என்று இளங்கோவன் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கூறியிருக்கக் கூடாது.அவரது கோரிக்கைகளை கட்சித் தலைவர் சோனியாவிடம்தான் வைத்திருக்க வேண்டும். இது தேவையில்லாத, தவறானபேச்சாகும்.விஜயகாந்த் தொடங்கியுள்ள புதிய கட்சியில் இளைஞர்கள் ஏராளமான அளவில் உள்ளனர். ஆனால் அவர்கள் எத்தனைநாட்களுக்கு அங்கே இருக்கப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மீண்டும் காமராஜர் ஆட்சி வர வேண்டும். அப்படியென்றால் காமராஜர் போன்ற எண்ணம் உடையவர்கள் ஆட்சியில் அமரவேண்டும். காமராஜரைப் போன்ற செயல்பாடுகள் அரசியல் கட்சிகளிடம் இருக்க வேண்டும் என்றார் குமரி அனந்தன்.












Click it and Unblock the Notifications