நக்கீரன் கோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

பூவிருந்தவல்லி:

நக்கீரன் கோபால் மீதான பொடா வழக்கில் பூவிருந்தவல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். தமிழ்த் தீவிரவாத அமைப்புடன் தொடர்புவைத்திருந்ததாகவும், அனுமதி இல்லாமல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் கூறி கோபால் மீது பொடா சட்டத்தின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

பொடா சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ததை எதிர்த்து கோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்தஉயர்நீதிமன்றம் பொடா சட்டத்தின் கீழ் கோபால் கைது செய்யப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசுஉச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது. மேலும், கோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் 100 பக்க குற்றப்பத்திரிக்கையை பொடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையைநீதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து விரைவில் கோபாலுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு இந்த வழக்கு மீதான விசாரணைதொடங்கும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+