For Daily Alerts
Just In
தொலைந்தது 10,000 அமெரிக்க டாலர்; மீட்டுத் தந்த விமான நிலைய மேலாளர்!
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் தவறுதலாக விடப்பட்ட 10,000 அமெரிக்க டாலர் பணத்தை அதற்கு உரியவரிடம் சேர்ப்பித்தார்விமான நிலைய அதிகாரி.
பொன்னுச்சாமி என்பவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் செல்ல வேண்டிய விமானத்தில் ஏறி அமர்ந்தார். அதன்பின்னர் பார்க்கையில், அவரது கையில் வைத்திருந்த பையை காணவில்லை.இந்த நிலையில் பொன்னுச்சாமி தொலைத்த பை, விமான நிலைய மேலாளர் சுந்தரத்தின் கையில் கிடைத்தது. அதைப் பார்த்தஅந்தப் பையில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்துள்ளார். அதில் 10,000 அமெரிக்க டாலர் பணம் இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற அவர் பையில் முகவரியும், தொலைபேசி எண்ணும் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து உடனடியாகபொன்னுச்சாமியைத் தொடர்பு கொண்டார். அது தனது பைதான் என்பதை பொன்னுச்சாமி கூறியுள்ளார்.
இதையடுத்து விமானத்தில் இருந்த பொன்னுச்சாமியிடம் அந்தப் பணப் பை சேர்க்கப்பட்டது.
Comments
Story first published: Friday, May 20, 2005, 5:30 [IST]