ஆசிரியை மீனாட்சி வழக்கு: வாலிபர், மாணவியிடம் விசாரணை
திருச்சி:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக புதிதாக 3 பேரிடம் போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கு தமிழகத்தில் பரபரப்பான வழக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது. அவர்காணாமல் போய் ஒரு ஆண்டு முடியப் போகிறது. அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை ஒரு துப்பும்கிடைக்கவில்லை. மதுரை உயர்நீதிமன்றக் கிளை இந்த வழக்கில் இறுதி முடிவுக்கு வர இம்மாதம் 30ம் தேதி வரை சிபிசிஐடிபோலீஸாருக்கு கெடு விதித்துள்ளது.இந்த வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்தின் பெயர் முக்கியமாக அடிபடுவதால் வழக்கின் போக்கை தமிழகத்தில்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக புதிதாக 3 பேரிடம் போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
மீனாட்சி காணாமல் போன சில நாட்களில் அவரைத் திருச்சியில் பார்த்ததாக திருச்சியைச் சேர்ந்த வாலிபர் ஜெகதீசன் என்பவர்சிபிசிஐடி போலீஸாரிடம் கூறியுள்ளார். அதேபோல அவரை திருச்சியில் பார்த்ததாக மாணவி மாதவி, விவசாயி சின்னையன்ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தமுடிவு செய்துள்ளனர். விரைவில் இதற்காக அவர்களை பெங்களூருக்குக் கொண்டு செல்லவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications