தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வர வேண்டும்: சோ.பா.
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் வருகிற சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி அமைந்தால்நல்லது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சாலை விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சோ.பாலகிருஷ்ணன், இன்று சட்டசபைக் கூட்டத் தொடர்தொடங்குவதால், கையெழுத்துப் போடுவதற்காக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.சட்டசபை உறுப்பினர் விடுதியில் தங்கியுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி ஆட்சி என்பது மத்தியில்இனிமேல் கட்டாயமாகி விட்டது. தற்போது மன்மோகன் சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதேபோல மாநில அளவிலும் கூட்டணி ஆட்சி அமைவதில் தவறில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதை நான் வரவேற்கிறேன்,விரும்புகிறேன். இது அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும், காங்கிரஸ்காரர்களின் விருப்பமும் இதுதான்.
இந்தக் கூட்டணி ஆட்சியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகள் என அனைவரும் இடம்பெறலாம்.
வாய்ப்பு கிடைக்கும்போது இதுகுறித்து கருணாநிதியிடம் பேசவுள்ளேன். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது.எனவே இதுகுறித்து யோசிக்கவும் அவகாசம் உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் பத்திரிக்கைகள் மூலமாக விவாதிக்கப்படுவது வேதனையைத் தருகிறது.நீண்ட பாரம்பரியம் உள்ள காங்கிரஸ் கட்சியில் இதுபோன்ற பூசல்கள் நிலவுவதைக் கேட்கும்போதே சங்கடமாக இருக்கிறதுஎன்றார் சோ.பாலகிருஷ்ணன்.
தான் இனிமேல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, இதுவே எனது கடைசி சட்டசபைக் கூட்டம் என்றும் ஒருகேள்விக்கு சோ.பா. பதிலளித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோ.பா. தேர்வுசெய்யப்பட்டார். அதற்கு முன்பாக அவர் சட்டசபை தமாகா தலைவராகவும் இருந்துள்ளார்.