இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் படுகொலைக்குப் பின்னர் நாட்டில் அவசர நிலை பிரகடனம்செய்யப்பட்டது. இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றம் அவசரமாக கூடி அவசர நிலையை மேலும் ஒரு மாதத்திற்குநீட்டித்துள்ளது.

அவசர நிலைக்கு நீட்டிப்புக்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் பதிவாகின. இதன்படி, போலீஸார் மற்றும்ராணுவத்தினருக்கு கூடுதல் அதிகாரம் கிடைத்துள்ளது. சந்தேகப்படும் எவரையும், எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும்தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தனி நபர் சுதந்திரணிம்கட்டுப்படுத்தப்படும்.

அவசர நிலை நீட்டிப்புக்கு தமிழ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாடாளுமன்றத்தில்பெரும்பான்மையாக உள்ள ஆளுங்கட்சி, எதிர் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டுப்போட்டதால் அவசர நிலை நீட்டிப்பு தீர்மானம் வெற்றி பெற்றது.

இலங்கையில் நவம்பர் மாதம் 17ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அவசர நிலை பிரகடனம்செய்யப்பட்டிருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமர் படுகொலைக்குப் பின்னர் 10நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+