விஜயகாந்த் கட்சியில் சேர்ந்தது ஏன்? பண்ருட்டி விளக்கம்!
சென்னை:
ஏழை, எளிய மக்கள் விஜயகாந்த்துடன் இருக்கிறார்கள். அதனால்தான் அவரது கட்சியில் இணைந்தேன் என்று முன்னாள்அமைச்சரும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக விளங்கியவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
விஜயகாந்த்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கிய காரணமாக இருந்து வருகிறார் எனமுன்பு கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது விஜயகாந்த் கட்சியில் சேர்ந்துள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன்.இதன் மூலம் எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால நண்பர்கள், ரசிகர்களை இழுக்கும் விஜயகாந்த்தின் திட்டம் தெளிவாகியுள்ளது.விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் இணைந்தது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், நான்ஏழைகளுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவன். ஏழைகள், எளியவர்கள், சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் அனைவரும்விஜயகாந்த்துடன்தான் இருக்கிறார்கள்.
எனவேதான் நான் விஜயகாந்த்தின் கட்சியில் இணைந்துள்ளேன். அவருடன் இணைந்து தமிழகத்தில் வறுமை, வேலையில்லாத்திண்டாட்டத்தை ஒழிக்கப் பாடுபடப் போகிறேன் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையின் முக்கியமான மூளைகளில் ஒருவராக திகழ்ந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். 1985ம் ஆண்டுஇலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தபோது, இந்தியாவிலிருந்து ஐ.நா. சபைக்கு ஒரு தூதுக்குழுஅனுப்பப்பட்டது. அதில் பண்ருட்டி ராமச்சந்திரனும் இடம் பெற்றிருந்தார்.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல முக்கியத் துறைகள் இவர் வசம் கொடுக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். எடுத்த பல முக்கியநடவடிக்கைகளுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பெரும் உதவியாக இருந்தார்.