திருமாவளவனுக்கு தே.மு.தி.க. எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பேனர்கள், கொடிக் கம்பங்களை சிதைக்கும் வேலையில் தொடர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு ஈடுபட்டால் அதை அமைதியான வழியில், காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றுதேசிய முற்போக்க திராவிட கழக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் கூறியுள்ளார்.

விஜயகாந்த் ரசிகர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களுக்கும் இடையே தமிழகத்தின் வட பகுதிகளில் அடிக்கடிமோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் எதிர் தரப்பினரின் கட்சிக் கொடிகள், பெயர்ப் பலகைகள், பேனர்களை தாக்கிசேதப்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் ராமு வசந்தன் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், எங்களது தலைவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாகஅறிவித்தவுடனேயே வன்முறையில் இறங்கி விட்டார் திருமாவளவன். எங்களுக்கு எதிராக கடுமையாக பேசி வரும் அவர் தனதுகட்சி தொண்டர்களை வன்முறையில் ஈடுபடுத்தி வருகிறார்.

அவரது தூண்டுதலின் பேரில்தான் சென்னை கே.கே.நகரில் எங்களது மன்றக் கொடிக் கம்பம் வெட்டப்பட்டது, கொடிகள்கிழிக்கப்பட்டன, பேனர்கள் சிதைக்கப்பட்டன.

இப்படிச் செய்வதன் மூலம் எங்களை அச்சுறுத்த அவர் முயலுகிறார். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். அமைதியானவழியில், காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார் ராமு வசந்தன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+