For Daily Alerts
Just In
அமைதியான தமிழ்நாடு: பர்னாலா ஷொட்டு!
ராமேஸ்வரம்:
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது, சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங்பர்னாலா பாராட்டு தெரிவித்துள்ளார்.மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வந்த பர்னாலா, அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நக்சலைட்டுகள்நடமாட்டம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அது உண்மைதான். இங்கு சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாகஉள்ளது. அமைதியான பூங்காவாக தமிழகம் திகழ்கிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. உழவர் சந்தைகளும் சிறப்பாகவே உள்ளன. ஆனால் அவற்றைஇன்னும் சிறப்பாக செயல்பட வைக்க புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும்.
பஞ்சாப், ஆந்திராவில் உழவர்ச ந்தைத் திட்டம் மிகச் சிறப்பாக நடைமுறையில் உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும்அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை இன்னும் சிறப்பாக மாற்ற நடவடிக்கைகள் தேவை என்றார் பர்னாலா.
Story first published: Thursday, September 22, 2005, 5:30 [IST]